வருமானம் குறைந்தவர்களை அடையாளம் காண புதிய அரசியல் கலப்படமில்லாத வழியொன்றை முன்னாள் அமைச்சர் மனோகணேசன் முன்மொழிந்துள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகம் என்பன, வருமானம் குறைந்த இலங்கை மக்களுக்கு மாதாந்தம் 14,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவினை அரசாங்கம் ஊடாக வழங்க ஒத்துழைப்பு அளிக்க முன்வந்துள்ளன.
இந்தத் திட்டத்துக்கான பயனாளிகளை அரசாங்கம் தெரிவு செய்யும் போது, வழமையான அரசியல் நலன் அடிப்படையில் அல்லாமல், உண்மையான தேவையுடையவர்கள் தெரிவு செய்யப்படவேண்டும் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இதன்படி மாதாந்த மின்சார பட்டியலில் 90 அலகுகளுக்கும் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துகின்றனவர்களே உண்மையில் வருமானம் குறைந்தவர்களாக கருதப்படவேண்டும் எனவும் மனோகணேசன் முன்மொழிந்துள்ளார்.