ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உறுதிபடுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர வெளிநாடு சென்றுள்ளமையினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சரத் ஏக்கநாயக்க கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.