வாகன இறக்குமதி தொடர்பான அப்டேட்!

10 months ago
aivarree.com

வாகனங்கள் தவிர அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடையை எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் நிதியமைச்சு நடத்திய கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை வாரந்தோறும் மீளாய்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வாகன இறக்குமதி மீதான தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன், மூலோபாய திட்டத்தின்படி அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக, மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.