லிட்ரோ கேஸ் நிறுவனம் தனது இலாபத்தில் 1.5 பில்லியன் ரூபா அல்லது 150 கோடியை ஈவுத்தொகையாக திறைசேரிக்கு வழங்கவுள்ளது.
இந்த தகவலை லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (20) தெரிவித்தார்.
குறித்த தொகையை தமது தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இன்று (20) திறைசேரிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார கட்டமைப்பிற்கு அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவாக இந்த மிகப்பெரிய தொகை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமையல் எரிவாயு விலை தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர், நாங்கள் அதிகளவில் விலைக் குறைப்புகளைச் செய்துள்ளோம். இந்த விலைகளை ஒரே விலை வரம்பிற்குள் தொடர்ந்து வைத்திருக்க எதிர்ப்பார்த்துள்ளோம் என்றும் கூறினார்.