ராஜாங்கனை சத்தா ரதன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் அவரை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் தேரர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.