மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி தடை தளர்த்தப்படவுள்ளது.
அதன்படி, 328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த தடை நீக்கமானது இன்று நள்ளிரவு முதல் அமுலக்கு வரும்.
மேலும் 300 அத்தியாவசிய பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கடந்த வாரம் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.