மியன்மார் இராணுவத்தின் கோரத் தாக்குதல் – 30 பொது மக்கள் பலி

1 year ago
World
aivarree.com

மியன்மாரின் தெற்கு ஷான் மாநிலத்தில் அமைந்துள்ள மடாலயத்தில் 30 க்கும் மேற்பட்டோர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதாகக் கிளர்ச்சிக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை மடாலயம் அமைந்துள்ள கிராமத்தின் மீது எரிகணை தாக்குதல்களை அந்நாட்டு இராணுவத்தினர் நடத்தியதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதலின் பின்னர் சனிக்கிழமையன்று அந்நாட்டு நேரப்படி மாலை 04.00 மணியளவில் குறித்த கிராமத்திற்குள் இராணுவத்தின் விமானப் படை மற்றும் பீரங்கிகள் நுழைந்துள்ளதுடன், மடாலயத்தில் மறைந்திருந்த கிராம மக்களைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் குறைந்தது 30 பொதுமக்களும் மூன்று பௌத்த பிக்குகளும் கொலை செய்யப்பட்டதாகக் கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.

மியன்மாரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவத்தினர் ஆட்சி கவிழ்ப்பினை மேற்கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இன்று வரை இராணுவத்துக்கும் ஆயுதமேந்திய எதிர்ப்பு குழுக்களுக்கும் இடையில் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.