மின்சாரம் | பொதுமக்களுக்கு விடுக்கும் அறிவுறுத்தல்

1 year ago
Sri Lanka
aivarree.com

உயர்தர பரீட்சைகள் காரணமாக நாளாந்த மின்வெட்டு அமுலாக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

நாளாந்தம் வழமைப் போல 2 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படுகின்ற போதும், 3 மணிக்குப் பின்னரே மின்வெட்டு அமுலாகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் மின்சார உற்பத்தி சிக்கலான நிலையில் இருப்பதால், மின்தடையை மட்டுப்படுத்த முடியாத நிலைமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.