மாட்டிறைச்சி உட்கொள்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள்

11 months ago
Sri Lanka
aivarree.com

வடமேல் மாகாணத்தில் இருந்து பெறப்படும் மாட்டிறைச்சியை உட்கொள்வதை தவிர்க்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் கால்நடைகள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் வடமேல் மாகாணத்தில் இருந்து கால்நடைகளை ஏற்றிச் செல்வது ஞாயிற்றுக்கிழமை (மே 28) முதல் நிறுத்தப்பட்டது.

குருணாகல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பரவும் வைரஸ் தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வட மேல் மாகாணத்தில் உள்ள 46 கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் 34 கால்நடைகளுக்கு இந்நோய் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.