இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ரஷ்யாவின் ஆதரவைப் பெறுவது குறித்து கலந்துரையாடுவதற்கு தூதுக் குழுவொன்று எதிர்வரும் 9ஆம் திகதி ரஷ்யா செல்லவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பங்கேற்கும் வகையில், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் முன்னாள் ரஷ்ய தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க ஆகியோர் ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
15ஆம் திகதி வரை அந்நாட்டு அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் ஆரம்ப கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.
இதேவேளை, தான் பிரான்ஸுக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் ரஷ்யாவிற்கும் விஜயம் மேற்கொண்டதாக வெளியாகும் தகவல்களை மறுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இது தவறான தகவல் பகிர்வு என வலியுறுத்தியுள்ளார்.