பேஸ்புக்கில் பிரபாகரனின் படத்தை பகிர்ந்தமைக்காக கைதான 4 பேர் 13 மாதங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கட்டனர்.
மட்டக்களப்பு செங்கலடி சித்தாண்டி ஏறாவூர் மற்றும் ஜயங்கேணி போன்ற பகுதிகளைச் சேர்ந்த க.சோபனன், யோ.யோகேஸ்வரன் , வ.விவேந்த், க.ஜெகநாதன் ஆகிய 4 பேருக்கும் இன்று பிணை கிடைத்தது.
இதற்கான இணக்கப்பாட்டை சட்டமா அதிபர் வழங்கிய நிலையில் மட்டக்களப்பு சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை பேஸ்புக்கில் பதிவிட்டமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.