நுவரெலியா ஊடான பிரிட்டிஷ் காலத்து ரயில் பாதையை புனரமைக்க நடவடிக்கை

1 year ago
Sri Lanka
aivarree.com

நானு ஓயாவிலிருந்து நுவரெலியா ஊடான இராகலை வரையான பிரிட்டிஷ் கால ரயில் பாதையைப் புனரமைப்பதற்குப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிநாட்டு முதலீடுகளை நாடவுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

31 கிலோ மீட்டர் நீளமுள்ள குறுகிய ரயில் பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.

எனினும் இது வணிக ரீதியான நம்பகத்தன்மை இல்லாமையினால், பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த ரயில் பாதையினை மீளப் புனரமைப்பதற்கு அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளை நாடவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியுள்ளார்.

இதனால் நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு அநேகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.