ஜெய்சங்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக

1 year ago
Infotainment
aivarree.com

எம் ஜி ஆர் சிவாஜி என இரு மாபெரும் நடிகர்களுக்கு இடையில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் ஜெய்சங்கர்.

‘ தென்னகத்து ஜேம்ஸ்போண்ட்” என்று போற்றப்பட்டவர்.

200 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த ஜெய்சங்கர் ”முரட்டுக்காளை” திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார்.

அதன்பின் பல குணசித்ர வேடங்களிலும் நடித்தார் .

ஜெய்சங்கரின் வாழ்க்கை வரலாறு பல புத்தகங்களாக வெளிவந்துள்ளது .

தற்போது அவரது வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் அவரது இளையமகன் ஈடுபட்டுள்ளார் .

வரலாற்று புத்தகத்தின் அடிப்படையில் திரைக்கதையை எழுதும் பணி தொடங்கி உள்ளது .

எதிர்வரும் ஜெய்சங்கர் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திட்டம் பற்றி முறையாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.