ஜனாதிபதி கோட்டாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

2 years ago
Sri Lanka
aivarree.com

ஜுலை 7ஆம் திகதிக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலக வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேரர்கள் அமைப்புக்களின் ஒன்றியத்தின் 11 தேரர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த திகதிக்குள் ஜனாதிபதி பதவி விலகாவிட்டால், அனைத்து தேரர்களையும் ஒன்றிணைத்து கொழும்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினை மற்றும் அராஜக நிலைமையை சீர் செய்வதற்கு உடனடியாக செயற்படுமாறு மகாநாயக்க தேரர்கள் கூட்டாக கைச்சாத்திட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

குறித்த கடிதத்திற்கு சரியான பதிலொன்றை அரசாங்கங்கம் தெரிவிக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தேரர்கள் அமைப்புக்களின் ஒன்றியத்தின் 11 தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.