சிங்களமல்லாதோரும் இலங்கை கிரிக்கெட்டில் இடம்பிடிக்கும் நிலை வேண்டும் | மனோ வலியுறுத்தல்

11 months ago
Sri Lanka
aivarree.com

சிங்களவர்கள் அல்லாதவர்கள் இலங்கை கிரிக்கட் அணியில் இணைய முடியாது என்ற நிலைமை மாற வேண்டும் எனத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் கோரியுள்ளார்.

நேற்று (29) நிறைவடைந்த IPL இறுதிப்போட்டி தொடர்பாக அவர் பதிவேற்றியுள்ள பேஸ்புக் பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது,

  • விளையாட்டு என்பது இன மதங்களுக்கு அப்பாற்பட்ட வியாபாரமாக தற்போது மாறியுள்ளது.
  • திறமையின் அடிப்படையிலேயே அணியில் வாய்ப்பளிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
  • ஆனால் நம் நாட்டில் (இலங்கையில்) இந்த “இனவாத சனியன்கள்” அதற்கு இடம் தருவதில்லை.
  • அப்படியே ஓரிருவர் தெரிவானாலும் இறுதி நேரத்தில் அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.
  • தாம் ஒரு அரசியல்வாதியாக இந்த விடயத்துக்காகவும் போராடுகின்ற போதும், பேஸ்புக்கில் எழுதுவதைப் போல அதுவொன்றும் இலகுவான காரியம் இல்லை எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.