குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை | அனுரகுமாரவின் வலியுறுத்தல்

2 years ago
Sri Lanka
aivarree.com

நாளை அல்லது நளை மறுதினம் குண்டுகள் வெடிக்கலாம் என தெரிவித்து பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளமை குறித்து மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில் 5,6ஆம் திகதிகளில் கரும்புலிகள் தினத்தை நினைவுகூறும் வகையில் வடக்கில் அல்லது தெற்கில் குண்டுகளை வெடிக்கவைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்த புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் வெளிநாட்டு தூதரக பணியாளர்களையும் இந்த இரண்டு நாட்களும் எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளவேண்டாம் என குறித்த கடிதத்தின் ஊடாக எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அரசாங்கத்திற்கு கிடைத்த குறித்த விபரங்கள் பகிரங்கப்படுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இல்லாவிடின் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியே இதுவெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.