கல்வி கற்பதை நிறுத்த பெண் பிள்ளைகளுக்கு விசம் | ஈரானில் அதிர்ச்சி

1 year ago
World
aivarree.com

பெண்கள் கல்வி கற்பதை நிறுத்தும் நோக்கில் ஈரானின் புனித நகரமான கோமில் பள்ளிச் சிறுமிகளுக்கு, “சிலர்” விஷம் ஊட்டுவதாக தெரியவந்துள்ளது.

ஈரானிய பிரதி அமைச்சர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இதனைக் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நவம்பர் பிற்பகுதியில் இருந்து, நூற்றுக்கணக்கான சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் குறிப்பாக தெஹ்ரானில் உள்ள கோமில் பதிவாகியுள்ளதாகவும், சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை பிரதி சுகாதார அமைச்சர் யூனஸ் பனாஹி, இவ்வாறு விஷம் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டது என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தினார்.

ஆனால் இது தொடர்பாக யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.