பெளர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (02) முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அனுராதபுரம் வரை விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அனுராதபுரத்திற்கும் கொழும்புக்கும் இடையில் இன்று முதல் 12 விசேட ரயில் பயணங்கள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் கூறியுள்ளார்.