இன்று முதல் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் சினோபெக்

10 months ago
aivarree.com

சீனாவின் சினோபெக் எரிபொருள் நிறுவனம் இன்று (15) முதல் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் நாட்டில் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் திறக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

சினோபெக் நிறுவனத்துக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும் இடையிலான முன்னைய ஒப்பந்தத்தின் பிரகாரம், முதலீட்டுச் சபையின் பதிவு மற்றும் அது தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (14) கொழும்பில் இடம்பெற்றது.

ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கையில் எரிபொருள் நிலையங்களை அமைப்பத்தல், எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சினோபெக் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளது.