பரிசுத்த பாப்பரசர் ஃப்ரான்சிஸ், ரோமிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள சுவாச கோளாறு காரணமாக வைத்தியசாலையில் சில தினங்கள் தங்கி இருந்து சிகிச்சை பெறுவார் என்று வத்திகான் அறிவித்துள்ளது.
அவருக்கு சுவாசக்கோளாறு இருந்தாலும் கொவிட் இல்லை என்று, வத்திகானின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில வாரங்கள் பாப்பரசருக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் அட்டவணையில் உள்ளன.
ஏப்ரல் மாத இறுதியில் அவர் ஹங்கேரிக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.