BREAKING : தேயிலை, இறப்பர் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிப்பு

3 weeks ago
Sri Lanka
aivarree.com

தேயிலை, இறப்பர் தொழிலாளர்களுக்கான விசேட சம்பள சபை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொழில் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசேட சம்பள சபை தொடர்பான ஆட்சேபனைகளை இம்மாதம் 15ஆம் திகதி வரையில் முன்வைக்க முடியும்.

இவ்விசேட வர்த்தமானியின் படி தேயிலை மற்றும் இறப்பர் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் நாளாந்த வேதனமான 1350 ரூபாவும், நாளாந்த விசேட கொடுப்பனவு 350 ரூபாவுமாக 1700/- என நாளாந்த வேதனம் நிர்ணயிக்கப்படுகிறது.

இதில் 1350 ரூபாய் என்ற நாளாந்த வேதனத்துக்குள் EPF மற்றும் ETF என்பனவும் அடங்கும்.

மேலதிக கொழுந்திலைக்கு கிலோவுக்கு 80 விகிதம் வழங்கப்படும்.