லங்கா பிரீமியர் லீக்கின் நான்காவது சீசனில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானின் பாபர் அசாம், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன் மற்றும் அவுஸ்திரேலியாவின் மேத்யூ வேட் உட்பட பல முக்கிய சர்வதேச நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, 2023 லங்கா பிரீமியர் லீக் போட்டியின் பணிப்பாளர் சமந்த தொடன்வெல, போட்டிக்கு முன்னரும் LPL ஏலத்தின் போதும் வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்காக கிட்டத்தட்ட 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்கியதன் பின்னர் முக்கிய உள்ளூர் மற்றும் சர்வதேச நட்சத்திரங்களை உரிமையாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர் என்று கூறினார்.
இதன்போது 2023 LPL ஏலம் ஜூன் 11 ஆம் திகதி நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
தசுன் ஷனக்க, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷன மற்றும் மதீஷ பத்திரன போன்றவர்கள் ஐந்து உரிமைகளாலும் இணைக்கப்பட்டுள்ளதாக சமந்த தொடன்வெல கூறினார்.
ஐந்து அணிகள் பங்கேற்கும் போட்டி ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெறும்.
![](https://srilankacricket.lk/wp-content/uploads/2023/05/LPL-Pre-Signs.jpg)