நானுஓய – ரதல்ல குறுக்கு வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு தேர்ஷ்டன் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து அதிவேகமாக சென்று வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் வேனில் பயணித்த 6 பேரும், முச்சக்கரவண்டி சாரதியும் கொல்லப்பட்டனர்.
பேருந்தில் பயணித்த 50க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.