இந்திய வானில் மர்ம பொருள் | விமான நிலையம் மூடல்

2 weeks ago
World
aivarree.com

இந்தியாவின் இம்பாலின் பிர் திகேந்திரஜித் சர்வதேச விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் நான்கு மணி நேரம் மூடப்பட்டது. 

மாலை 5.30 மணியளவில் பணிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த விமான நிலையத்துக்கு மேலாக வானில் மர்மமான பொருள் ஒன்று அவதானிக்கப்பட்டது.

 

இதனை அடுத்து, பிற்பகல் 2.30 அளவில் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

மர்மமான பொருளின் அடையாளம் குறித்து உடனடி விளக்கங்கள் எதுவும் தரப்படவில்லை.

ஆனால் DGCA மற்றும் IAF கூட்டாக அதை ஆராய்ந்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.