LIOC வெளியிட்டுள்ள செய்தி

1 year ago
aivarree.com

இலங்கை – இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் ( LIOC   ) இலங்கையில் மேலும் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்கவுள்ளது.

LIOC    நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் மனோஜ் குப்தா அய்வரி செய்திகளுக்கு இந்த தகவலை வழங்கினார்.

LIOC   க்கு தற்போது 213 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன.

மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி இந்த மாத இறுதிக்குள் மேலும் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக  LIOC   நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.