ராஜபக்ச சகோதரர்களுக்கு தடை விதிக்க G7 நாடுகளுக்கும் கனடா பரிந்துரை

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கும் இரண்டு இராணுவத்தினருக்கும் அண்மையில் கனடா பொருளாதார தடையை விதித்தது. 

இவ்வாறே ஜீ7 நாடுகளை அவர்களுக்கு பொருளாதார தடையை விதிக்குமாறு கனடா அறிவுறுத்தி/ஊக்கப்படுத்தி வருவதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். 

மனித உரிமைகளை பாதுகாக்காமை அதற்கான சட்டத்திட்டங்களை அமுலாக்காமை காரணமாக அவர்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டது. 

கனடா விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக அவர்களுக்கு கனடாவுக்கு வர முடியாது என்பதோடு, கனடாவிலுள்ள அவர்களது சொத்துகள்  முடக்கப்படும். 

இதேபோன்று ஜீ7 நாடுகளும் அவர்களுக்கு எதிராக பொருளாதார தடையை விதிக்கச் செய்ய கனடா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, என்று அவர் கூறியுள்ளார்.