மொட்டு கட்சியில் மேலும் பிளவு

1 year ago
Gossip
aivarree.com

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சில நாட்களுக்குள் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறியமுடிகிறது. 

அந்த கட்சியைச் சேர்ந்த பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரிந்து செல்லவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சிக்குள் நடந்த சில நிகழ்வுகளால் கடும் அதிருப்திக்கு உள்ளானவர்களே இவ்வாறு சுயாதீனமாக செயற்பட தீமானித்துள்ளனர். 

அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது அவர்கள் தங்களின் தீர்மானத்தை அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.