மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் | மத்திய வங்கி ஆளுநர்

11 months ago
Sri Lanka
aivarree.com

பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையுடன், கட்டுப்பாடுகள் பலவற்றை மேலும் தளர்த்துவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய CBSL ஆளுநர் வீரசிங்க:-

– பணவீக்க அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவு நிலுவை நெருக்கடியை கட்டுப்படுத்த இலங்கை தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

– பணவீக்கம் எந்தவொரு பொருளாதாரத்திற்கும் முதல் எதிரியாகும் – இப்போது அது குறைகிறது.

– எந்தவொரு கூட்டுக் கொள்கை நடவடிக்கைகளும் வணிகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு வேதனையானவை என்றாலும், உயரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையின் பேரழிவுத் தாக்கங்களைத் தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் அவசியம்.

– பணவீக்கத்தைக் குறைத்தல் மற்றும் கொடுப்பனவு நிலுவை நெருக்கடியைத் தீர்ப்பது போன்ற முக்கிய நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதன் பலனை நாடு தற்போது அறுவடை செய்கிறது.

– தொடர்ந்து, மக்களை பாதிக்கும் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும், என்றார்.