பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது

10 months ago
Sri Lanka
aivarree.com

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி, அவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) களனி பிரிவு அதிகாரிகளினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் 51, 22 மற்றும் 20 வயதுடைய பேலியகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களை இன்று (25) கொழும்பு, புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.