கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற பேருந்து, நானுஓய – ரதெல்ல குறுக்கு வீதியில் ஏற்படுத்தி விபத்தால் 7 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
இதனை அடுத்து கல்வி அமைச்சு இந்த வாரம் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்க தயாராகியுள்ளதாக அய்வரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி பாடசாலை மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் விடயத்தில் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
குறிப்பாக ஒரு நாளில் சுற்றுலா செல்லக்கூடிய தூரம் 100 கிலோமீற்றர்களாக குறைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.