பண்டிகை காலத்தில் சிறப்பு ரயில் சேவைகள்

1 year ago
Sri Lanka
aivarree.com

பண்டிகைக் காலத்தில் பல்வேறு சிறப்பு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு, கோட்டை நிலையம் மற்றும் பதுளை, காலி, பெலியத்த மற்றும் அனுராதபுரம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் 4 ரயில்களும், கொழும்பு மற்றும் காலிக்கு இடையில் 2 ரயில்களும், மருதானைக்கும் பெலியத்தவிற்கும் இடையில் 2 ரயில்களும், அனுராதபுரத்திற்கும் பெலியத்தவிற்கும் இடையில் 2 ரயில்களும் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழ் – தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கொழும்பில் இருந்து புறப்படும் பொதுமக்களின் வசதிக்காக ஏப்ரல் 17 ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.