பாடசாலைகள் எவற்றுக்கும் நாளையதினம் (16) விடுமுறை வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த்குமார் அய்வரி செய்திகளுக்கு நேற்று (14) பிரத்தியேகமாக இந்த தகவலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை உத்தியோகப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
நாளை திங்கட்கிழமை சகல பாடசாலைகளும் வழமைப்போல இயங்கும் என அவர் அறிவித்துள்ளார்.