நாணய சுழற்சியில் வென்று என்ன செய்வதென்று மறந்துப்போன ரோஹித் சர்மா

1 year ago
SPORTS
aivarree.com

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

எவ்வாறாயினும் நாணய சுழற்சியில் வென்றதன் பின்னர், அணி என்ன தீர்மானத்து என்பதை ரோஹித் சர்மா மறந்துவிட்டார்.

சிறிது தாமதமாகி, முதலில் பந்துவீசுவதாக அவர் அறிவித்தார்.

ஆனால் இரவில் பந்துவீசி அனுபவம் பெறும் வகையில் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்யவே இந்திய அணி முன்னதாக தீர்மானித்திருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.