எதிர்வரும் திங்கட்கிழமை அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல் தினம் வருகிறது.
அதனை முன்னிட்டு திங்கட்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு மாத்திரம் விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்கிறது.
எனினும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.