இந்தியா – ஒடிசாவின் பாலசோரில் தடம் புரண்ட மற்றொரு ரயிலின் பெட்டிகள் மீது பயணிகள் ரயில் மோதியதில் 30 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 300 பேர் காயமடைந்தனர்.
பலர் ரயிலுக்கடியில் சிக்கியிருக்கலாம் என்றும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
மூன்றாவது சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்ற ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு அய்வரியுடன் இணைந்திருங்கள்.