கொலை சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவன் கைது

11 months ago
Sri Lanka
aivarree.com

அண்மையில் பாணந்துறையில் ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக 23 வயதுடைய இளைஞன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்துவதற்கு உதவி வழங்குவதற்காக குறித்த பாடசாலை மாணவன் பிரதான சந்தேக நபருடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபர் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி இரவு ஆடை தொழிற்சாலைக்கு முன்பாக சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனை கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் தொழிற்சாலை வளாகத்திற்குள் ஓடினார், அதன் பிறகு சந்தேக நபர் பின்தொடர்ந்து அவரைத் தாக்கியதன் விளைவாக இந்த உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பாணந்துறை, மொதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 23 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.