கருஞ்சிறுத்தையை காண பல மணி நேரம் காத்திருந்த சஜீத்

1 year ago
Gossip
aivarree.com

கடந்த வாரம் சஜித், ஹம்பாந்தோட்டையில் இருந்த போது யால காட்டில் முதன்முறையாக கருஞ்சிறுத்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை கேள்விபட்டுள்ளார்.  

உடனடியாக சஜித், அந்த அபூர்வ பிளாக் பாந்தரை என்ற கருஞ்சிறுத்தையை பார்க்க யாலவுக்குச் செல்ல தீர்மானித்தார்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு திரும்பும் வழியில் சஜித் யால பகுதிக்கு சென்று கருஞ்சிறுத்தையைக் காண சுமார் 2 மணித்தியாலங்கள் காத்திருந்தார்.

ஆனால் சஜீத்துக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.  

பின்னர் அந்தத் திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.