கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறை கைதி தப்பியோட்டம்!

10 months ago
Sri Lanka
aivarree.com

காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுகயீனம் காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையின் 19ஆவது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (25) காலை தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த கைதி, போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இரண்டு மாத சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதாகவும் சிறைச்சாலை திணைக்களப் பேச்சாளர் கூறியுள்ளார்.

எவ்வாறெனினும் தப்பிச் சென்ற கைதியை தேடும் நடவடிக்கை பொலிஸாரினால் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.