உள்ளூராட்சித் தேர்தலை ஒருமாதம் பிற்போடுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் நாளை(19) பாராளுமன்றில் விவாதத்துக்கு வருகிறது.
அது நிறைவேற்றப்பட்டால், அதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்காக 2 வார காலம் அவகாசம் வழங்கப்படும்.
அதனைப்பயன்படுத்தி தேர்தலை ஏப்ரல் வரையில் ஒத்தி வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு ஒன்று அய்வரிக்கு தகவல் வழங்கியது.
இதேவேளை இந்த சட்டமூலத்தை வரவேற்கின்ற போதும், அதனை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என பல்வேறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.