எரிபொருள் விநியோகத்துக்கு இடையூறு – 20 பேருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) தொழிற்சங்க தலைவர்கள் உட்பட 20 ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்துக்கு இடையூறு ஏற்படுத்திய காரணத்தினாலேயே இவர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விநியோகத்தைச் சீர்குலைக்கும் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை இன்று முதல் கட்டாய விடுமுறையில் அனுப்பத் தீர்மானித்துள்ளதாக CPC முன்னர் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.