உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவி மீது அசிட் வீச்சு | மூவர் வைத்தியசாலையில்

1 year ago
Sri Lanka
aivarree.com

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக தனது தந்தையுடன் சென்ற யுவதி மீது அசிட் வீசப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் வைத்து, அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை வழிமறித்த இளைஞன் ஒருவரால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

குறித்த இளைஞன் அந்த யுவதியின் காதலன் என பொலிசார் தெரிவிக்கின்றனர். 

அவர் அசிட் வீசிய போது ஏற்பட்ட குழப்ப நிலையால், யுவதியின் தந்தை, யுவதி மற்றும் குறித்த இளைஞனும் காயமுற்று தற்போது கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.