உக்ரேன் மீது ரஷ்யா வான் தாக்குதல்; தாய், மகள் உட்பட மூவர் பலி

11 months ago
World
aivarree.com

உக்ரேன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் தாயொருவரும், அவரது 11 வயதுடைய மகள் உட்பட மொத்தம் மூன்று பேர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் உள்நாட்டு நேரப்படி வியாழன் (01) அதிகாலை 3.00 மணியளவில் (00:00 GMT) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் இருந்து ஏவப்பட்ட அனைத்து 10 ஏவுகணைகளையும் தமது வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும் சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணை பாகங்கள் இத்தகைய சேதத்தை ஏற்படுத்தியதாகவும் உக்ரேன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.