ஆர்ப்பாட்டக் காரர்களை கலைக்க பொலிஸார் தாக்குதல் (VIDEO)

1 year ago
Sri Lanka
aivarree.com

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று கொள்ளுப்பிட்டி – காலி வீதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மற்றும் பல்வேறு செயற்பாட்டாளர்கள் இணைந்து கொழும்பில் இந்த எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு (2022) அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே 140 நாட்களுக்கும் மேலாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.