அரசியலமைப்பு பேரவை இந்த மாதம் 25ம் திகதி முதன்முறையாக ஒன்று கூடவுள்ளது.
பேரவை அறிவிக்கப்பட்டு சில மாதங்களானாலும் கூட, அதற்கான சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் நியமனத்தில் ஏற்பட்ட தாமதத்தினால் அதன் கூட்டங்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
கடந்தவாரம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை ஜனாதிபதி பெயரிட்டார்.
அதன் அடிப்படையில் வரும் 25ம் திகதி காலை 9.30க்கு அரசியலமைப்பு பேரைவையின் முதலாவது கூட்டம் நடைபெறவுள்ளது.