அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இன்று பூட்டு

11 months ago
Sri Lanka
aivarree.com

பொசன் – பெளர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இன்று மூடப்படவுள்ளன.

உரிமம் பெற்ற அனைத்து மதுபான சாலைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் இன்று மூடப்படும் என கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, பொசன் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து அனுராதபுரத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மே 31 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளன.

அனுராதபுரத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி வரை மூடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட உத்தரவுகளை மீறி எவரும் மதுபான விற்பனை அல்லது அது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.