1) அட்டுலுகமவில் 9 வயதான சிறுமியான ஃபாதிமா ஆயிஷா கொலை தொடர்பாக ஒருவர் சந்தேகத்தில் கைதானார்.
2) அதே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவரே கைதானார்.
3) அவர் குறித்த சிறுமியின் உறவினர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
4) ஏற்கனவே அந்த பகுதியைச் சேர்ந்த 2 பேர் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்ற போதும், அவர்கள் கைதுசெய்யப்படவில்லை.