நியூசிலாந்துக்கு வெள்ளையடித்தது இந்தியா

1 year ago
SPORTS
aivarree.com

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் தொடரை இந்திய அணி 3:0 என்ற கணக்கில் வென்றது. 

தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று நடைபெற்றது. 

இதில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 385 ஓட்டங்களைப் பெற்றது. 

சுப்மன் கில் 78 பந்துகளில் 112 ஓட்டங்களைப் பெற்றார். 

அவர் இந்த தொடரில் பெறும் இரண்டாவது சதம் இதுவாகும். 

அணித்தலைவர் ரோஹித் சர்மா 85 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பெற்றார். 

இதன் மூலம் 28 ஒருநாள் சதங்களைப் பெற்றுள்ள சர்மா, தொடக்க ஆட்டக்காரராக வந்து அதிக சதங்களை அடித்த வீரர் என்ற சனத் ஜெயசூரியவின் சாதனையை சமன் செய்தார். 

ஹார்டிக் பாண்டியா 54 ஓட்டங்களைப் பெற்றார். 

பந்துவீச்சில் நியூசிலாந்தின் ஜெக்கொப் டஃபி மற்றும் ப்லேயர் டிக்னர் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினர். 

386 என்ற வெற்றியிலக்கை விரட்டி துடுப்பாடிய நியூசியாந்து அணி, 41.2 ஓவர்களில் 295 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. 

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெவொன் கொன்வே 100 பந்துகளில் 138 ஓட்டங்களை பெற்றார். 

சர்துல் தக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்கள். 

யுஸ்வெந்த்ரா ச்சஹால் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார். 

இதன்படி இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

ஆட்ட நாயகனாக சர்துல் தக்கூர் தெரிவானார்.