சிறிலங்கா கிரிக்கட் தொடர்பாக எடுக்கப்பட்ட 3 முக்கிய முடிவுகள்

1 year ago
SPORTS
aivarree.com

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20/20 உலகக்கிண்ணத் தொடரில் கலந்துகொள்வதற்காக சென்ற இலங்கை அணி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டிருந்தது. 

அவரால் அந்த அறிக்கையின்படி வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சு 3 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. 

  1. சிறிலங்கா கிரிக்கட், 20/20 உலகக்கிண்ணத் தொடருக்காக செலவிட்ட தொகை குறித்து தடயவியல் கணக்காய்வினை மேற்கொள்ளுதல். 

2) பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதான தனுஷ்க குணதிலகவுக்கு தடை விதித்தல். 

3) சிறிலங்கா கிரிக்கட்டின் தெரிவுக்குழுவை கலைத்து, தகுதி வாய்ந்த புதியவர்களை நியமித்தல்.